தமிழக சட்டமன்ற தேர்தல் எதிரொலி – 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

0

தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் இந்த சேவை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து அதற்கான ஆயத்த பணிகளை அரசு செய்து கொண்டு வருகின்றது. அதே போல் தேர்தல் ஆணையமும் தொடர்ந்து தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக புதிதாக சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

‘இனி ஊழியர்களின் சம்பளம் குறையாது’ – புதிய ஊதிய விதியை ஒத்திவைத்த மத்திய அரசு!!

இந்த சேவைகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் செயல்பட உள்ளன. சென்னையில் மட்டும் 5 இடங்களில் இருந்து 2 ஆயிரத்து 644 சிறப்பு பேருந்துகள் செயல்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முக்கிய நகரங்களான மதுரை, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அன்று மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று முறையாக வாக்களிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தமிழக அரசு இதனை செயல்படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் மக்கள் வெளியூர்களில் இருந்து வாக்களிக்க வர இருப்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்துகளில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல் அவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனையும் முறையாக செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here