சீனாவை சார்ந்த மூன்று வீரர்கள் 90 நாட்கள் விண்வெளியில் தங்கிய பிறகு நேற்று தங்களுடைய பயணத்தை நிறைவு செய்து பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர்.
விண்வெளி வீரர்கள்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவை சேர்ந்த மூன்று வீரர்கள் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர். இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டனர். மேலும் அங்கு விண்வெளி சார்ந்த பல ஆய்வுகளையும் மேற்கொண்டனர். கிட்டத்தட்ட 90 நாட்கள் அங்கு தங்கி இருந்து வீரர்கள் இது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இது மட்டுமல்லாமல், அங்கிருந்தபடியே சீன அதிபர் ஜி ஜிங்பிங்க் உடன் வீடியோ கான்பரன்ஸ் வழியாக கலந்துரையாடி மகிழ்ந்தனர். இது போக, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய வீரர்கள் என்ற பெருமையையும் இவர்கள் தட்டிச் சென்றனர். இவர்கள் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, இவர்கள் மூவரும் நேற்று சென்ஸோ 12 என்ற விண்கலம் வாயிலாக பூமிக்கு புறப்பட்டனர். இவர்களது திட்டப்படி நேற்று காலை இவர்கள் கோபி பாலைவனத்தில் பத்திரமாக தரை இறங்கினர். அவர்களின் புகழ் தற்போது விண்வெளி வரை பரவியிருப்பது சீன மக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அடுத்து ஆண்டும் இந்த ஆய்வுக்காக வீரர்கள் விண்வெளிக்கு செல்ல இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்