தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மழை ஆரம்பமாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 3 தேதி வரை கோவை, நீலகிரி மற்றும் ஒரு சில மாவட்டங்களிலும் மற்றும் கடலோர பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மழை பெய்யும்…
சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவக்காற்று மழை பற்றிய தகவல்களை அறிவித்துள்ளது. அதில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இத்துடன் அறிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிக்கையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பேயும் என்றும் திண்டுக்கல், தேனீ, தென்காசி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் அதாவது ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் கடலோர பகுதிகளில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மிதமான மலை பெய்ய வைப்பிளது என்றும் மற்ற பகுதிகள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வானிலை அதேபோல் இருக்கும் என்றும் அறிவித்தது. இன்று வங்கக்கடலில் தென்மேற்கு, தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று வீசும் அதேபோல் இன்றும் நாளையும் வடமேற்கு, வங்கக்கடலில் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவித்தது. வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை அதேபோல் அரபிக்கடலில் தென், வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசப்படும் என்பதால் 4 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்