தெற்காசிய கால்பந்து சம்மேளன சார்பில் நடைபெறும் கால்பந்துப் போட்டியில் இந்திய மகளிர் அணி, மாலத்தீவை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா vs மாலத்தீவு!!
தெற்காசிய கால்பந்து சம்மேளன கால்பந்து போட்டி நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி, முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதனை தொடர்ந்து நேற்று 2 வது லீக் ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொண்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியினர் 9-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவு மகளிர் அணியை வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் அஞ்சு தமாங் (4), பிரியங்கா தேவி (1), கிராஸ் (2), சவுமியா (1), காஷ்மினா (1), ஆகியோர் கோல் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
இதில் அஞ்சு தமாங் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தியுள்ளார். இந்த ஆட்டத்தில் கோலடிக்க மாலத்தீவு வீராங்கனைகள் தீவிர முயற்சி செய்த போதும் அதை இந்திய வீராங்கனைகள் வெற்றிகரமாக தடுத்தனர். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற 13-ந் தேதி வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.