ஒரே போட்டியில் 12 கோல்கள்…, தெற்காசிய கால்பந்து லீக்கில் அசத்திய இந்திய அணி!!

0
ஒரே போட்டியில் 12 கோல்கள்..., தெற்காசிய கால்பந்து லீக்கில் அசத்திய இந்திய அணி!!
ஒரே போட்டியில் 12 கோல்கள்..., தெற்காசிய கால்பந்து லீக்கில் அசத்திய இந்திய அணி!!

தெற்காசிய கால்பந்து லீக் தொடரில், இந்திய மகளிர் அணி, 12-0 என்ற கோல் கணக்கில் பூடான் அணியை வீழ்த்தி அசத்தி உள்ளது.

தெற்காசிய கால்பந்து லீக்:

பங்களாதேஷில் உள்ள டாக்காவில் 20 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான தெற்காசிய கால்பந்து லீக் தொடரின் 4வது சீசன், நேற்று முதல் தொடங்கி உள்ளது. இந்த தொடரில், பங்களாதேஷ், நேபாளம், பூடான் மற்றும் இந்தியா ஆகிய 4 அணிகள் பங்கு பெற்றுள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதில், நடப்பு சாம்பியனான இந்திய மகளிர் அணியானது, நேற்று தனது முதல் போட்டியில் பூடான் அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், இந்திய வீராங்கனைகள், ஆரம்ப முதலே கோல் மழை பொழிய ஆரம்பித்தனர். அதாவது, இந்த போட்டியின் முதல் பாதி முடிவதற்குள், 29, 36, 43 மற்றும் 45+2 ஆகிய நிமிடங்களில் இந்தியாவின் அபூர்ணா முதல் 2 கோலையும், நிது மற்றும் நேஹா தலா ஒரு கோலையும் அடித்து அசத்தினர்.

இதனால், முதல் பாதியில் 4-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து, 2வது பாதியில் இந்திய அணியே முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது. இந்தியாவின் அனிதா குமாரி, லிண்டா கோம் ஆகிய இருவரும் தலா 3 கோல்கள் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளனர். மேலும், நேஹா 2 கோல்கள் அடித்ததன் மூலம், இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 12-0 என எதிரணியை கோல் அடிக்க விடாமல், வெற்றியுடன் தனது தெற்காசிய கோப்பை பயணத்தை தொடங்கி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here