தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் சூரியுடன் தனக்கு இருக்கும் கருத்து வேறுபாடு பற்றி மனம் திறந்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஷ்ணு விஷால்
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர்கள் விஷ்ணு விஷால் மற்றும் சூரி. இதில் ஹைலைட்டே சூரியின் பரோட்டா காமெடி தான். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனாலேயே சூரிக்கும், விஷ்ணுவிற்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. தற்போது விஷ்ணு விஷால் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே ரஜினி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்ட விஷ்ணு சில கருத்து வேறுபாட்டால் அவரை விட்டு பிரிந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை திருமணம் செய்ய உள்ளார் விஷ்ணு. விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக பட ப்ரோமோஷன் விழாவில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஏற்கனவே சூரிக்கும், விஷால் குடும்பத்திற்கு பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டுள்ளது. விஷாலின் அப்பா தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லி சூரி போலீசில் புகாரளித்திருந்தார். அதனை பற்றி பெட்டியில் கேட்டபோது விஷ்ணு சூரி பற்றி ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.
‘ஜெயலலிதாவை விட இபிஎஸ் ஆட்சி காலத்தில் தான் அதிக ஊழல் நடந்துள்ளது’ – ஸ்டாலின் பளிச் பேட்டி!!
அதாவது, இந்த விஷயத்தை விலாவரியாக சொல்ல வேண்டும் என்றால் சூரி பற்றிய பல உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கும், எனக்கு எல்லாமே நீங்க தான் தயவு செஞ்சு உதவி பண்ணுங்க என்று காலில் விழுந்தவர் இப்படி பல்டி அடிப்பது அதிர்ச்சியான விஷயமாக உள்ளது. அவர் காசில் தான் சாப்பிடணும்னு எந்த அவசியமும் எங்களுக்கு இல்லை என்று கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.