தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சோனு சூட். இவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருமான வரித்துறையினர் இவர் 20 கோடிக்கும் மேல் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் தெரிவித்தனர்.
அதாவது அவர் அறக்கட்டளையின் மூலம் வசூலித்த பணத்தில் 18 கோடி ரூபாய் வசூலித்ததில் ஒரு கோடியே 90 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டதாகவும், மீதித் தொகை பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்தது. இதனால் இவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
“सख्त राहों में भी आसान सफर लगता है,
हर हिंदुस्तानी की दुआओं का असर लगता है” ? pic.twitter.com/0HRhnpf0sY— sonu sood (@SonuSood) September 20, 2021
இந்நிலையில் இவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் பற்றி முதன்முதலில் பேசியுள்ளார். அதாவது அவர் தன் ட்விட்டர் பக்கம் மூலம் அவர் தெரிவித்ததாவது, தமது அறக்கட்டளையில் இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்