தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்து வரும் நேரத்தில் சில நடிகைகளும் வில்லியாக நடிப்பதற்கு முன் வருகின்றனர். அந்த வகையில், ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரியாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு இன்று வரைக்கும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்தில் நடிகை பூமிகா இரட்டை வேடங்களில் வில்லியாக நடித்து மாஸ் காட்டி இருந்தார். இவரைத் தொடர்ந்து நடிகை சோனியா அகர்வால் தான் நடிக்க இருக்கும் படத்தில் வில்லியாக வேடம் ஏற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘மாமன்னன்’ திரைப்படத்தின் 2 ஆவது சிங்கிள் ஜிகு ஜிகு…..,நாளை ரிலீஸ்….,
அந்த வகையில், இயக்குனர் ஏ.ஆர்.ஜெய கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் ‘உன்னால் என்னால்’ என்ற திரைப்படத்தில் அவர் வில்லியாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தில், மோசடி கும்பல் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்க இருப்பது கூடுதல் தகவல்.