தனக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் என்று திருமண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பகிர்ந்த சோனியா அகர்வாலுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவிக்கும் ரசிகர்கள்.
மனம் கவர்ந்த சோனியா அகர்வால்
2003 – ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கொண்டேன் படத்தில், செல்வராகவன் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். அப்படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் சோனியா. திருமணங்களுக்காக கடத்தப்படும் பெண்கள் – இந்தோனேசியாவில் சர்ச்சைக்குரிய வழக்கம்
மேலும், இவர் கோவில், மதுர மற்றும் 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, வானம், சதுரங்கம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார்.
விவகாரத்தில் முதல் திருமணம்
இவ்வாறு அனைவரின் மனதை வென்ற சோனியா அகர்வால், 2006 – ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின், 2010 – ஆம் ஆண்டு இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன்பின், அயோக்யா, தடம், தனிமை ஆகிய படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார் சோனியா அகர்வால்.
மூன்று நாட்களில் திருமணம்
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு இன்னும் மூன்று நாட்களில் திருமணம் என்பதை, திருமண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பகிர்ந்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அவரது ரசிகர்கள், 2-வது திருமணம் செய்து கொள்ள போகும் சோனியா அகர்வாலுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இப்படம் அவரது புதிய படத்திற்கு விளம்பரமாகக் கூட இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.