கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுவதினால் இறப்பு விகிதமும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. அவ்வாறு இளைஞர் ஒருவர் தன் அம்மாவுக்கு இறக்கும் தருவாயில் கால் செய்து பாட்டு பாடியுள்ளார். இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாவுக்கு போனில் பாட்டுப் பாடிய மகன்
கொரோனா தோற்று அதிவேகமாக பரவி வரும் நிலையில் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் பல உயிர் சேதங்களும் ஏற்பட்டு வருகின்றது. இது போன்று கொடூரமான காலகட்டத்திலும் நடக்கும் சில விசயங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. மருத்துவர் தனது ட்விட்டர் பதிவில் ஊறியதாவது,
“இன்று, எனது ஷிப்டின் முடிவில், உயிர் பிழைக்க வாய்ப்பில்லாத நோயாளி ஒருவரின் குடும்பத்தினருடன் வீடியோ அழைப்பில் பேசினேன். பொதுவாக, அவர்கள் விரும்பினால் எங்கள் மருத்துவமனையில் இவ்வாறு செய்வது வழக்கம். நோயாளியின் மகன் என்னிடம், என் நேரத்தை கொஞ்சம் கேட்டார். அதன் பிறகு அவர் இறந்து கொண்டிருக்கும் அம்மாவுக்காக ஒரு பாடலை பாடினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
“அவர் ‘தேரா முஜ்சே ஹை பெஹலா கா நாட்டா கோய்’ எனும் பாடலை பாடினார். அவர் தன் அம்மாவை பார்த்தபடி பாடுவதை பார்த்துக்கொண்டே நான் போனை வைத்துக்கொண்டிருந்தேன்.இறக்கும் தருவாயில் தன அம்மாவுக்கு போனில் பாட்டு பாடிய இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.