தொழிலதிபர் ஒருவர் தன்னை கற்பழித்து கொள்ள முயன்றதாகவும், மேலும் தனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனவும் பிரபல பங்களாதேஷ் நடிகை சம்சுண்ணஹர் ஸ்மிருதி அந்நாட்டின் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம்சுண்ணஹர் ஸ்மிருதி, இவர் மிகவும் புகழ்பெற்ற பங்களாதேஷ் நடிகை. இவருக்கு வயது 28. இவர் பெரும்பாலும் பொரி மோனி என்ற தனது இன்னோரு பெயரால் அறியப்படுவார். இவர் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில், தன்னை சிலர் கற்பழித்து கொள்ள முயன்றதாகவும், இதற்கு தனக்கு நியாயம் வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் ஷேய்க் ஹசினா அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த பதிவு மிகப்பெரிய சர்ச்சையை அந்நாட்டில் ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல பத்திரிகையாளர்கள் சம்சுண்ணஹர் ஸ்மிருதியை பேட்டி எடுத்தனர். அதில் அவர் தன்னை கற்பழித்து, கொலை செய்ய முயன்றது உத்தரா கிளப் லிமிடெட் முன்னாள் தலைவர் நசீர் யு மஹ்மூத் எனவும் மேலும் அவருடைய நண்பர்கள் நால்வர் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அந்த நடிகை சட்ட அமலாக்க துறையினரிடம் உதவி கேட்டதாகவும், ஆனால் யாராலும் தனக்கு உதவி வழங்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். இது தற்போது பங்களாதேஷில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்