அரசு பள்ளிகளை ஸ்மார்ட் யுகத்திற்கு ஏற்ப வகுப்பறைகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். அதன் படி தமிழக அரசு முதற்கட்டமாக சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப வகையில் உருவாகும் “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டத்தை தொடங்கியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதை தொடர்ந்து இப்போது தெலுங்கானா மாநில அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ், கணினி போன்ற வசதிகள் அதிக அளவில் அமல்படுத்தி வருகின்றனர். இதனால் சோலார் பேனல் மூலம் மின்சாரம் வழங்குவதற்க்கான அரசாணையை தெலுங்கானா அரசு தெரிவித்திருந்தது. அதன்படி இதுவரை 100 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.., உதவித்தொகை குறித்து வெளியிட்ட மாவட்ட நிர்வாகம்!!!
மேலும் 453 பள்ளிகளில் சோலார் அமைப்பு பணி மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்ச் மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் உள்ள 1,521 அரசு பள்ளிகளில் சோலார் சிஸ்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.