கொரோனாவுக்கு மருந்து பாம்பு விஷமா? – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!!

0

Jararacussu Pit வைப்பர் என்ற பாம்பின் நஞ்சு கொரோனவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர்.

உலக நாடுகளை ஆட்டி படைத்து வரும் நோய்களில் ஒன்று கொரோனா. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூகான் மாநிலத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று தற்போது உலகின் முலை முடுக்குகளிலெல்லாம் பரவி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த கொடிய நோய்க்கு லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.

உலகின் பல ஆராய்ச்சியாளர்கள் முயன்றும் இதற்கான மருந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. தடுப்பு மருந்து மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட பாம்பின் விஷம் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.

அதாவது கொரோனா பாதித்த குரங்கு ஒன்றிற்கு Jararacussu pit Viper என்ற பாம்பின் விஷத்தை செலுத்தி ஆய்வு செய்ததில், அந்த விஷம் வைரஸை 75% கட்டுப்படுத்தியுள்ளதாக மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த ஆய்வை விரிவுப்படுத்த மருத்துவ ஆய்வாளர்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி கொரோனா பிடியில் சிக்கி தவித்து வரும் மக்களின் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here