கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய நடிகர் சூர்யா, கார்த்தி – குவியும் பாராட்டுக்கள்!!

0

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது நிவாரண நிதியாக சிவகுமார் குடும்பம் ரூ. கோடி வழங்கியுள்ளனர். இதனால் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கொரோனா நிவாரண நிதி

கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. மேலும் இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லாமல் பலரும் வறுமையில் வாடி வருகின்றனர். தமிழக அரசும் நிவாரண நிதியாக 4000 ருபாய் வழங்கி வருகிறது. மே 10 இல் இருந்து அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இப்படி இருக்க இந்த கொரோனா பேரிடரை தடுக்க பலரும் முடிந்த வரை உதவிகளை செய்து வருகின்றனர். தற்போது பிரபல நடிகரான சிவக்குமார் குடும்பம் 1 கோடி ரூபாயை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. கார்த்தியும், சூர்யாவும் இணைந்து இந்த பணத்தை வழங்கியுள்ளனர்.

ஆக்சிஜன் இல்லை,படுக்கைகள் இல்லை – டெல்லியை போல் ஆகும் தமிழ்நாடு!!!

போன வருடம் போடப்பட்ட ஊரடங்கில் சூர்யா குடும்பம் 50 லட்சம் நிதியுதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல நடிகர்கள் நிதியுதவி தர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.1 கோடி நிதியுதவி செய்த சிவக்குமார் குடும்பத்திற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here