நடிகர் சிவகார்த்திகேயன் பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், அவர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
பத்திரிக்கையாளர் அந்தணன்
முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், பிரின்ஸ் திரைப்படம் இவருக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. இதனால் இதை சரிக்கட்டும் விதமாக இப்போது அயலான், மாவீரன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் இவர் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் பட வாய்ப்பின்றி திணறி வந்த போது பிரபல இயக்குனர் ஒருவர் தான் வாய்ப்பளித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் அந்த இயக்குனர் உங்களது அடுத்த படத்தையும் நானே இயக்குகிறேன் என சிவகார்த்திகேயனிடம் கூறியுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயனின் முதல் படம் அமோக வெற்றி பெற்றதை அடுத்து பெரிய பெரிய இயக்குனர்களிடம் கமிட்டாக தொடங்கி விட்டாராம். அதன் பிறகு தனக்கு முதல் படம் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குனரிடம் சேர்ந்து படம் நடிக்கவில்லை. இதனால் சிவகார்த்திகேயனை இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுடன் ஒப்பிட்டு பத்திரிக்கையாளர் அந்தணன் சில விஷயங்களை கூறியுள்ளார்.
எல்லா தப்பும் அவ மேல தான்.., கன்றாவியா பண்ணிட்டு இருக்கா.., ரக்ஷிதாவை கிழித்த சர்ச்சை நடிகை!!
அதாவது அண்மையில் வெளியாகிய லவ் டுடே படத்தின் இயக்குனர் ரங்கநாதன் தனக்கு ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுக்காத ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் அடுத்த படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இவருக்கு பல பெரிய நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வந்த போதும் அவர் ஞானவேல் ராஜாவுடன் கைகோர்த்துள்ளது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் இன்னும் பல உயரங்களுக்கு செல்வார். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் அப்படி இல்லை என மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.