நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படம் அப்டேட் இன்று வெளியாக இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் தனது படத்தின் அப்டேட் வெளியிடுவதாக தகவல் வழியாக உள்ளது.
சிம்பு vs சிவகார்த்திகேயன்:
தமிழ் சினிமாவில் உன்னை நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டிருப்பவர்கள் தான் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சிம்பு. நடிகர் சிம்பு நடித்த பத்து தலை திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் உருவாகும் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சிம்பு நடிக்கும் இப்படத்தை “கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்” என்ற படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். மேலும் இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6:30 க்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடத்தி வரும் SK Production நிறுவனம் சார்பாக தயாரிக்க இருக்கும் ஆறாவது படத்தின் அப்டேட்டையும் சிம்புக்கு எதிராக இன்று மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக சற்றுமுன் அறிவிப்பை வெளியிட்டனர்.
தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தை தொடர்ந்து உலகநாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குனர் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்காமல் இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிம்புக்கு எதிராக சிவா அப்டேட் கொடுப்பதால், அது அவர் நடிக்கும் திரைப்படமா? இல்லை தயாரிக்கும் திரைப்படமா? என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.