
சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி செய்த முட்டாள்தனமான வேலையால் அண்ணாமலை படுத்த படுக்கையாக ஹாஸ்பிடலில் கிடக்கிறார். அவரை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என டாக்டர்கள் சொல்ல முத்து பணத்துக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். அப்போது வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்கலாம் என்று சொல்ல பத்திரத்தை தேடுகின்றனர். ஆனால் அதை மீனா எங்கு வைத்தார் என்று தெரியவில்லை. பின் விஜயா ரோகிணி, மனோஜிடம் பணம் கேட்க அவர்களும் எங்களிடம் பணம் இல்லை என சொல்லி குண்டைத் தூக்கிப் போடுகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இப்படி இருக்கும் சூழலில் மீனா தன்னுடைய நகையை வைத்து பணத்தை ரெடி பண்ணி முத்துவிடம் கொடுக்கிறார். இந்நேரத்தில் இந்த சீரியலின் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ரோகிணி தக்க சமயத்தில் பணத்தை தன் அப்பாவிடம் வாங்கி கொடுக்காததால் விஜயா கடும் கோபத்தில் இருப்பாராம். மேலும் ரோகிணி இடம் பேசுவதை சுத்தமாக நிறுத்தி விடுவாராம். அதற்கு மாறாக மீனாவிடம் பாசமாக பேசுவாராம். இது மீனாவுக்கே அதிர்ச்சியாக இருக்குமா. ஒரு பக்கம் ரோகிணி விஜயாவிடம் பணத்துக்காக என்ன ஒதுக்கி வச்சிட்டீங்கல்ல என சண்டை போடுவாராம்.
TNPSC Cource Pack சலுகை விலையில் பெற இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.