சிக்கனில் அனைத்து வகையான டிஷ்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது இந்த சிக்கனை வைத்து சிந்தாமணி சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கி
காய்ந்த மிளகாய் – 8
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும். அதாஹ்ன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், கருவேப்பிலை, வரமிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின் சிக்கனை அதில் சேர்த்து வதக்கி சிறிது மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். சிக்கன் நன்கு சுருண்டு வந்ததும் மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு பிறகு திறந்து மீண்டும் கிளறவும். இப்பொழுது சீரகத்தூள் சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.
இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நீர் வற்றி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிந்தாமணி சிக்கன் தயார். இதில் தக்காளி சேர்த்து கொள்ள வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.