சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை அடுத்த ஆண்டு அமல்ப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஸ், மெட்ரோ ரயில்
சென்னை போன்ற பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது. இதனால் மக்களும் தங்களின் வசதிக்கேற்ப பேருந்து, மெட்ரோ, ரயில் போன்ற போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த மூன்று வகையான போக்குவரத்துக்கும் மக்கள் தனி தனியே டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு தேவையற்ற அலைச்சலும், சிரமமும் ஏற்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டு திட்டத்தை கொண்டு வர சமீபத்தில் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் இது குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என 3 விதமான போக்குவரத்திற்கும் ஒரே பயண சீட்டு வசதியை 2024 ஆம் ஆண்டு அமல் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்குரிய டெண்டரை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் அரசு ஆலோசனை செய்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இது போன்ற போக்குவரத்துக்கு அடையாள அட்டை உள்ள நிலையில், செல்போன் செயலி மூலம் இ-டிக்கெட் பெரும் வசதி முதன் முறையாக தமிழகத்தில் தான் அமல் படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.