பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை திருட்டு போனதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் யேசுதாஸ்:
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகரான யேசுதாஸின் மகனும், பாடகருமாக விளங்கி கொண்டிருப்பவர் தான் விஜய் யேசுதாஸ். இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு,கன்னடம் மற்றும் துளு உள்ளிட்ட மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் சென்னை அபிராமிபுரத்தில் உள்ள அவர் வீட்டில் 60 பவுன் நகை காணாமல் போனதாக சொல்லப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதுகுறித்து அவருடைய மனைவி தர்ஷணா பாலா அபிராமிபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் காணாமல் போன நகைகளை கடந்த டிசம்பர் மாதம் தான் கடைசியாக பார்த்ததாக கூறியுள்ளார். தற்போது அந்த நகைகளை பார்த்த போது காணவில்லை என்றும், இந்த திருட்டில் வீட்டில் வேலை பார்த்த மேனகா மற்றும் பெருமாள் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சொல்லி புகார் அளித்துள்ளார்.
தமிழக புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் குவிந்த அட்மிஷன்.., வெளியான அறிக்கை!
அவர் புகார் அளித்த பெயரில் அபிராமிபுரம் காவல்துறை வழக்கு பதிவு செய்து அந்த வீட்டில் வேலை பார்த்த மேனகா மற்றும் பெருமாள் இருவரையும் நேரில் வரவழைத்து விசாரித்து வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.