எஞ்சாய் எஞ்சாமி பாடலை பாடிய தீ தற்போது சற்று வித்தியாசமாக மாட்டு கொட்டகையில் மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
காலா, கபாலி, ஜகமே தந்திரம் போன்ற படங்களை இசையமைத்த இசையமைப்பாளர் மற்றும் பாடகர் சந்தோஷ் நாராயணன் அவர்களின் மகள் தான் தீ. தன் அப்பா போலவே தீயும் நன்றாக பாடுவார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும். இவர் பாடிய ஏய் சண்டகாரா, கண்ணம்மா, ரவுடி பேபி, ரத்தின கட்டி பாடல்கள் படு ஹிட் அடித்தன. இவர் சினிமா பாடல்கள் தவிர ஆல்பம் பாடல்களிலும் பாடியுள்ளார்.
சமீபத்தில் இவர் அப்பா இசையமைத்து பாடகி தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய எஞ்சாய் எஞ்சாமி என்ற ஆல்பம் பாடல் யூடுப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தற்போது இவர் எடுத்த போட்டோஷூட் படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் வித்தியாசமாக மாடர்ன் உடை அணிந்து மாட்டு கொட்டகையில் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இவர் ரசிகர்கள் அதை தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தீயின் லேட்டஸ்ட் புகைப்படம்:
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்