சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்., தொடர் தோல்வியை சந்திக்கும் இந்திய வீரர்கள்., இந்த போட்டியிலாவது வெற்றி கிடைக்குமா??

0
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்., தொடர் தோல்வியை சந்திக்கும் இந்திய வீரர்கள்., இந்த போட்டியிலாவது வெற்றி கிடைக்குமா??

சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உட்பட பல நாடுகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நேற்று நடைபெற்ற இந்த தொடருக்கான முதல் சுற்றில் பி வி சிந்து, h.s பிரனாய் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இந்நிலையில் இன்று ஆண்கள் இரட்டையர் பிரிவுக்கான முதல் சுற்று நடைபெற்றது. இந்த சுற்றில் இந்தியாவின் சி. ஷெட்டி, எஸ். ரங்கிரெட்டி ஜோடி, ஜப்பானின் டி.சைட்டோ ஏ. கோகா ஜோடியை எதிர்கொண்டனர்.

அரசுப் பள்ளி ஆசிரியர்களே., 2 மாத கோடை விடுமுறை ஊதியம் கட்? பரபரப்பு தகவல்!!

இந்த இரு ஜோடிகளுக்கு இடையே நடந்த கடுமையான ஆட்டத்தில் 21-18, 14-21, 21-18 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடி, ஜப்பான் ஜோடியிடம் வீழ்ந்தது. இதை தொடர்ந்து பெண்கள் இரட்டையர் பிரிவுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் டி. ஜாலி, ஜி.கோபிசந்த் ஜோடி, ஹாங்காங்கின் PL Yeung, NT யூங் ஜோடியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here