நடிகர் சூர்யாவின் சிங்கம் 2 படத்தில் போதை பொருள் கடத்தியதாக கைதான செக்வூம் மால்வின் என்ற நபர் உண்மையிலேயே போதை பொருள் கடத்தும் ஒரு குற்றவாளி தான் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அன்றே கணித்தார் சூர்யா:
நடிகர் சூர்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சிங்கம் 2. இந்த படத்தில் போதை பொருள் கடத்தும் ஆப்பிரிக்க குற்றவாளியான டேனி என்பவரையும், அவரது நண்பர் ஒருவரையும் சூர்யா கைது செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதே பாணியில், பெங்களூரில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் நைஜீரியாவை சேர்ந்த செக்வூம் மால்வின் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது, அந்த நபர் சிங்கம் 2 படத்தில் டேனியின் நண்பராக நடித்தவர் என்பதும், உண்மையிலேயே அவர் போதை பொருள் கடத்தும் ஆசாமி தான் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவரின் இந்த கைதை அடுத்து, அன்றே கணித்தார் சூர்யா என்ற ஹேஸ்டேக் மீண்டும் டிரெண்டிங்கில் கிளம்ப ஆரம்பித்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்