சிம்புக்கு இருந்த ஒரு பிரச்சனையும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது – உற்சாகத்தில் ரசிகர்கள்!!

0

நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது. இதனால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இன்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது.

கோலிவுட் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் சில காலம் தலைகாட்டாமல் இருந்த சிம்பு, தற்போது உடல் எடையை குறைத்து சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர களமிறங்கி உள்ளார். ஆனால் தயாரிப்பாளர் சங்கம் சிம்புவின் முந்தைய பட விவகாரம் காரணமாக அவருக்கு ரெட் கார்டு விதித்ததால் படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

அதாவது படப்பிடிப்பில் குறித்த நேரத்தில் கலந்துகொள்வது கிடையாது, தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என தொடர்ந்து புகார் எழுந்ததால் இந்த ரெட் கார்டு தரப்பட்டது. மேலும் சிம்புவின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றக்கூடாது என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் நடிகர் சிம்புக்கு விதித்த ரெட் கார்டை திரும்ப பெற்றது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். மேலும் வெந்து தணிந்தது காடு படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் முழு ஒத்துழைப்பு அறிவிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here