சிம்புவின் வெற்றி பெற்ற ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையாடா’ மற்றும் ‘செக்கச்சிவந்த வானம் ‘ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர் ரஹ்மான் இவர்களின் கூட்டணியில் அமைந்த பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் புகழ் பெற்றவை. இந்நிலையில் இவர்களின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புவின் நடிப்பில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் 2 படங்கள் உருவாக உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘மாநாடு’ படத்தின் வேலைகளை முடித்துவிட்டு, ‘பத்து தல’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சிலம்பரசன். இந்தப் படம் கன்னடத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ளார். இந்த படத்திற்கான பாடல்களின் முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இப்படத்தில் சிலம்பரசன், கௌதம் மேனன், கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், டிஜே, மனுஷ்ய புத்திரன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு கொரோனா காரணமாக மீண்டும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளதாகவும், அந்த நேரத்தில் அனைத்து பாடல்களும் தயாராக இருக்கும் எனவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!