தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் என ஆல் கிரவுண்டிலும் சிக்ஸராக அடித்து தள்ளியவர் தான் நடிகர் சிலம்பரசன். இவர் நடித்த பத்து தல திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் சிம்பு 48 படத்தில் நடிக்க இருக்கிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அவரது சினிமா கெரியரில் பல ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்தார். அப்போது கௌதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் மீண்டும் பழைய பார்முக்கு வந்தார். இந்த கூட்டணியில் அடுத்தடுத்து அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
அடுத்ததாக ரசிகர்கள் இவர் கூட்டணியில் உருவாக இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்புவுக்கும் கவுதம் மேனனுக்கு இடையே ஏதோ மோதல் ஏற்பட்டுள்ளதாம்.
தமிழக பொதுத்தேர்வு மாணவர்களே.., பிளஸ் 2 தேர்வு முடிவில் குளறுபடி.., வெளியான ஷாக் தகவல்!!!
அதாவது ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கவுதம் மேனன் சிம்புவை தரைகுறைவாக பேசியுள்ளாராம். இதனால் தற்போது அவர் கவுதம் மேனன் படத்தில் நடிக்க தயக்கம் காட்டுவதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் வலைபேச்சு அந்தணன் கூறியுள்ளார்.