கயலிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டும் சூர்யா – பல ரொமான்ஸ்களுடன் வெளியான ‘ஜில்லுனு ஒரு காதல்’!!

0

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சில்லுனு ஒரு காதல்” சீரியலில் இன்று சூர்யா கயலிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது கயல் தனது வயது குறித்து தான் பொய் சொல்லி இருப்பது நினைத்து மிகவும் வருந்துகிறார்.

“சில்லுனு ஒரு காதல்” சீரியல்

இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சில்லுனு ஒரு காதல்” நாடகத்தில் இன்று சூர்யா தனது தவறு குறித்து கயலிடம் மன்னிப்பு கேட்கிறார். இதனை அடுத்து கயலிற்கு தான் சூர்யாவிடம் தனது வயது குறித்து பொய் சொல்லி இருப்பதை நினைத்து மிகவும் வருந்துகிறார். அதே போல் அது குறித்து பயப்படவும் செய்கிறார். பின், கயல் வீட்டில் சாக்லேட் சாப்பிடுகிறார்.

தமிழகத்தில் மண்ணெண்ணெய் அளவை குறைத்த மத்திய அரசு – பாதிக்கப்படும் குடும்ப அட்டைதாரர்கள்!!

அப்பொழுது சாக்லேட் சாப்பிட்டு கொண்டிருக்க கையெல்லாம் சாக்லேட் ஒட்டிக்கொள்கிறது. அப்பொழுது கைகழுவலாம் என்று எழுந்திரிக்க திடீரென சேலை நழுவ பரிதவித்து போகிறார். அதே சமயம் சூர்யா உள்ளே வர கயலுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதுதான் சாக்கு என்று சூர்யா கயலிடம் நெருங்க திடீரென இந்துமதி வந்து காரியத்தையே கெடுத்து விடுகிறார். கயலும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விடுகிறார். இங்கு இப்படியாக இருக்க, கயலின் அக்கா காயத்திரி அவரது தந்தையிடம் வந்து சண்டை போடுகிறார். தனது கணவரை அடிக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கோபம் அடையும் கயல் அப்பா மிகவும் கத்தி விடுகிறார். பின், தேன்மொழி மற்றும் அவரது அம்மா இருவரும் வெளியே செல்கின்றனர். அதே போல் தேன்மொழி தனது தந்தையை மீண்டும் வீட்டிற்குள் வரவழைப்பதற்கான யோசனைகளை தனது அம்மாவிற்கு வழங்குகிறார். அப்போது கமலா வரவும், இருவரும் சண்டை போடுவது போல் நடிக்கின்றனர்.

இவர்களது சண்டையை உண்மை என்று நம்பி விடும் கமலா இருவரையும் திட்டி விட்டு தேன்மொழியின் அப்பாவை வீட்டிற்கு வர சொல்லி விடுகிறார். பின், சூர்யா வீட்டில் கயலிற்கு தாலி பிரிச்சு கோர்க்கும் விழா குறித்து பேசுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here