SI தேர்வில் நடந்த முறைகேடு.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்.., விசாரணையை தீவிரப்படுத்த முடிவு!!!

0
SI தேர்வில் நடந்த முறைகேடு.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்.., விசாரணையை தீவிரப்படுத்த முடிவு!!!
SI தேர்வில் நடந்த முறைகேடு.., வெளிவந்த திடுக்கிடும் தகவல்.., விசாரணையை தீவிரப்படுத்த முடிவு!!!

பட்டப் படிப்பை முடிக்கும் ஒவ்வொரு நபரும் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு அரசு வேலையில் அமர வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டுள்ளனர். என்ன தான் இந்த போட்டித்தேர்வுகள் பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்தாலும் அதிலும் பல முறைகேடுகள் நடக்க தான் செய்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 545 காலி பணியிடங்களுக்கான SI தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் தேர்வு முடிவு 2022ம் ஆண்டு, மார்ச் மாதம் வெளியானது. இந்நிலையில் தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தேர்வர்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியானது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…, மீனவர்களுக்கு கடும் எச்சரிக்கை!!

மேலும் இந்த வேலையை வாங்க தேர்வர்கள் 20 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விவகாரத்தில் ஆள்சேர்ப்பு பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத் பால் உட்பட, உயர் போலீஸ் அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் உயர் பதவியில் உள்ள இன்னும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கு குறித்த விசாரணையை துரிதப்படுத்தி இரண்டு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here