சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்…, நியூசிலாந்துக்கு எதிராக சாதிப்பாரா??

0
சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்..., நியூசிலாந்துக்கு எதிராக சாதிப்பாரா??
சதம் அடித்து அசத்திய இந்திய வீரர்..., நியூசிலாந்துக்கு எதிராக சாதிப்பாரா??

சையது முஷ்டாக் அலி டிராபியில் பஞ்சாப் அணி சார்பாக இந்தியாவின் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

சையது முஷ்டாக் அலி டிராபி:

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான சையது முஷ்டாக் அலி டிராபி கடந்த அக்டோபர் 11ம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த தொடரின் காலிறுதி சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில், கர்நாடகா அணியை எதிர்த்து, பஞ்சாப் அணி போட்டியிட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து, 225 ரன்களை எடுத்திருந்தது. இதில், இந்திய வீரரான சுப்மன் கில் 55 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்களை விளாசி 126 ரன்களை அடித்து அசத்தியுள்ளார்.

T20WC .., இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு.., அடுத்த போட்டியில் செய்ய போவது என்ன??

டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். இந்த தொடரிலும், இவர் அதிரடியாக விளையாடி எதிரணிக்கு பெரும் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here