இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியானது தனது 13 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை 34 ரன்கள் வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 18 புள்ளிகள் பெற்று முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதில், ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத்தின் சுப்மன் கில் 58 பந்துகளில் சதம் (101) அடித்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்த இவர், சர்வதேச அளவிலும் சிறந்த சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, சர்வதேச அளவிலான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலும் சதம் அடித்துள்ள இவர், தற்போது ஐபிஎல்லில் சதம் அடித்து ஒரே வருடத்தில் அனைத்து வடிவிலும் சதம் அதிவேகமாக சதம் வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களே., அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது?? முக்கிய தகவல் வெளியீடு!!
நடப்பு வருடம் மட்டும் இவர் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக ஓர் இரட்டை சதம், 5 சதம் உட்பட 980 ரன்களை குவித்துள்ளார். இவரது இந்த தொடர் அதிரடியை பயன்படுத்தி ஐபிஎல்லில் சதம் அடித்து அசத்தி உள்ளார். இதனால், இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் விராட் கோலி அடுத்த தலைமுறையை வழி நடத்த தயாராகுங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.