இந்தியாவின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயருக்கும் பும்ராவை போல, அறுவை சிசிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர்:
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் பாதியில் இருந்து முதுகு வலி காரணமாக விலகினார். பும்ராவை போல, இவரும் சமீபகாலமாக அடிக்கடி முதுகு வலியால் அவதிக்கு உள்ளாகி வருகிறார். இதனால், இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்தும் விலகினார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
முன்னணி வீரரான இவரை, பிசிசிஐ மருத்துவ குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சமீபத்தில், பும்ராவுக்கு இருந்த இந்த பிரச்சனைக்கு, நியூஸ்லாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. தற்போது, ஸ்ரேயாஸ் ஐயரை பரிசோதித்த மருத்துவ குழுவும், அறுவை சிகிச்சை மேற்கொண்டால் சிறந்த பலன் அளிக்கும் என கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
WPL 2023: UP வாரியர்ஸ் அணியை வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ்…, இறுதிப்போட்டிக்கு முன்னேறி அபாரம்!!
மேலும், இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய லண்டன் அல்லது இந்தியாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டால், குறைந்தது, 4 அல்லது 5 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டி இருக்கும். இதனால், எதிர்வரும் ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உள்ளிட்டவை ஸ்ரேயாஸ் ஐயர் இழக்க நேரிடும். ஆனால், இவர் ஒரு நாள் உலக கோப்பைக்குள் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.