இந்திய அணி ஒருநாள் தொடரில் தடுமாறி வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஸ்ரேயாஸ் ஐயர்:
சர்வதேச இந்திய அணியானது அடுத்த இரண்டு மாதத்திற்கு ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்த உள்ளது. இந்த தொடருக்கு பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஜூன் 7ம் தேதி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்த இறுதிப் போட்டியை தொடர்ந்து, சர்வதேச இந்திய அணி, இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒரு நாள் உலக கோப்பைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த உலக கோப்பை தொடருக்குள், இந்திய அணியில் காயம் காரணமாக விலகி உள்ள, பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அணிக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றன. இவர்களில், ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை தற்போதைய இந்திய ஒருநாள் அணிக்கு அதிக தேவையாக உள்ளது. அதாவது, 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கும் இவர், கடந்த 2019 ல் நடைபெற்ற உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
ஓர் இடத்திற்கு போட்டி போடும் 4 அணிகள்…, 50 ஓவர் உலக கோப்பையில் நேரடியாக தகுதி பெற போவது யார்??
இவர், 2019 க்கு பிறகு, 20 ஒருநாள் போட்டிகளில் 4வது இடத்தில் களமிறங்கி 5 அரைசதம், 2 சதம் உட்பட 805 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக, ரிஷப் பண்ட் 9 போட்டிகளில் 340, கே எல் ராகுல் 3 போட்டியில் 189, இஷான் கிஷன் 6 போட்டியில் 106, மணீஷ் பாண்டே 3 போட்டியில் 74 மற்றும் சூர்யகுமார் 5 போட்டியில் 30 ரன்களும் எடுத்துள்ளனர். இந்த புள்ளிப்பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயரை தனது சிறந்த பங்களிப்பை அளித்து உள்ளார். இதனால், தான் ஷ்ரேயாஸ் ஐயரின் வருகை மூலம், இந்திய அணியில் பேட்டிங்கில் பலம் சேரும் என கூறப்பட்டு வருகிறது.