இந்திய அணியின் ஒருநாள் தொடர் நாயகன் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து விரைவில் மீள்வது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர்:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றி பெற்றது. இதனால், 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து, 2வது ஒருநாள் போட்டியானது, ராய்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நாளை மறுநாள் (21ம் தேதி) நடைபெற இருக்கிறது. இந்த ஒருநாள் தொடரில் இருந்து, பிசிசிஐயால் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் என தேர்வு செய்யப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலி காயம் காரணமாக விலகினார்.
சர்வதேச டேபிள் டென்னிஸ்: அரையிறுதிக்குள் நுழைந்த மணிகா பத்ரா மற்றும் சத்யன் ஜோடி!!
இவருக்கு மாற்று வீரராக ரஜத் படிதாரை பிசிசிஐ அறிவித்திருந்தது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான செயல்பாட்டில் இறங்கி உள்ளேன். விரைவில் அணியில் இணைந்து விடுவேன் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்குள், குணமடைந்து அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.