தமிழகத்தில் மே 15ம் தேதி வரை கடைகளை அடைக்க தயார் – வணிகர்கள் சங்கம் அதிரடி!!

0

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வரும் காரணத்தினால் அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து கடைகள் அடைக்க தயார் என்று வணிகர்கள் சங்கம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

கடைகள் அடைப்பு:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிக அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை குறைக்கும் வகையில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொற்று காரணமாக கடை அடைப்பு குறித்து செய்தி வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை வணிகர்கள் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் 3000 சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளைமூட வேண்டும் என்பதற்கு உரிய காரணங்கள் ஏதும் இல்லை. பெரிய கடைகள் அனைத்தும் மூடுவதால் சிறிய கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விடுகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கை பலரது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் உள்ளது. கூட்ட நெரிசலில் மக்கள் மதுபானங்கள் வாங்கினால் தொற்று ஏற்படாது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

ஆனால் அத்யாவசிய பொருட்களை வாங்கும் பொழுது தொற்று ஏற்பட்டு விடுகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். வணிகர்களின் வாழ்வாதார மீட்சிக்கு ஆதரவாக 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் கடைகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் அரசே அத்யாவசிய பொருட்களுக்கான விநியோகத்தை ஏற்றுக்கொண்டால் தமிழகத்தில் வருகிற மே மாதம் 15ம் தேதி வரை கடைகளை அடைத்து கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த அரசிற்கு எங்களது பங்களிப்பை அளிக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here