மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!!

0
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் - நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!!
மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் - நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - கலெக்டர் அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் சர்வதோஷ பரிகார தலமாக விளங்குவது என்றால் அது புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில். இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு கடந்த மார்ச் 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் நாளை ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதனை முன்னிட்டு நேற்று தேரின் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நாளை ஆழித் தேரோட்டம் நடைபெற இருப்பதால், திருவாரூரை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு.., முழு லிஸ்ட் உள்ளே!!

தடையை மீறி யாரேனும் கடையை திறந்தால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். மேலும் பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here