தென்னிந்திய தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். என்னதான் இவர் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற அளவுக்கு உயர்ந்திருந்தாலும், அவரின் சினிமா கெரியரில் நங்கூரமாக இருந்தது அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தான். இப்படி இருக்க இப்பொழுது மகன் தந்தை இடையே பிரச்சனைகள் நடந்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் ஒவ்வொரு மேடையிலும் எனக்கும் என் மகனுக்கும் எந்த பிரச்சனை இல்லை என்று கூறி வருகிறார். இதனை தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் திருமண நாள் அன்று ஷோபாவுடன் விஜய் எடுத்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்கானது. ஆனால் விஜய் அவர் அப்பாவுடன் ஏன் புகைப்படம் எடுக்கவில்லை, அப்ப அவர்களுக்குள் இன்னும் பிரச்சனை முடியவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
ச்சீ.., உன் புருஷன் எதுக்கு அடுத்த பொண்ணை நோட்டம் விடுறான்.., ராதிகாவை கிழிக்கும் பாக்கியா!!
இந்நிலையில் இது தொடர்பாக ஷோபா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதில், எங்கள் கல்யாண நாள் குறித்து விஜய்க்கு கால் செய்த அடுத்த கொஞ்சம் நேரத்திலே அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். மேலும் எனது வாட்சப் dpயில் போட்டோ வைக்க வேண்டும் என்பதற்காக தான் விஜய்யுடன் புகைப்படம் எடுத்து கொண்டேன்.
அப்போது எனது கணவர் வெளியூரில் இருந்தார். அவரும் இருந்திருந்தால் சேர்ந்து புகைப்படம் எடுத்திருப்போம் என்று கூறினார். இவர் கூறியதை வைத்து பார்க்கும் பொழுது அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை தான் போல் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.