விக்ரம் படத்தில் தான் நடிப்பதை பற்றி வாயை திறந்த விஜய் டிவி பிரபலம் – அவரே வெளியிட்ட பதிவு!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஷிவானி நாராயணன் தற்போது விக்ரம் படத்தில் நடிப்பது பற்றிய தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஷிவானி நாராயணன்

பகல் நிலவு சீரியல் மூலம் விஜய் டிவியில் நாயகியாக அறிமுகமானவர் தான் ஷிவானி நாராயணன். அதன் பிறகு இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் அனைவரின் நெஞ்சத்திலும் நல்ல இடத்தை பிடித்தார்.

இவர் செய்த தவறே பாலாஜி பின்னாலேயே சுற்றியது தான். அவருக்கு கைகால் அமுக்கி விடுவது, அவர் சொல்வதெற்கெல்லாம் வழிமொழிவது இப்படியே செய்து வந்தார். இது ஆடியன்ஸுக்கே கடுப்பாகி விட அவரது அம்மாவே 70வது நாளில் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து பாட்டாசாய் வெடித்தார்.

அடுத்த நாளில் இருந்தே பாலாஜியிடம் பேசுவதே இல்லை. அவர் பக்கம் திரும்புவதே கிடையாது. வீட்டை விட்டு வெளியேறிய ஷிவானிக்கு தற்போது படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆனால் ஷிவானி இது பற்றி ஒருநாளும் வாய் திறந்தது கிடையாது.

தற்போது அவர் இன்ஸ்டா லைவில் ரசிகர்களிடம் கலந்துரையாடும் போது விக்ரம் படத்தை பற்றி ரசிகர்கள் கேட்டபோது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது விக்ரம் ஷூட்டிங்கின் போது கேரவனில் ஷிவானி நாராயணன் பெயர் ஒட்டப்பட்டிருப்பதை காட்டியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here