சின்ன திரையில் சீரியல் நடிகையாக அறிமுகமாகி தற்போது ரசிகர்கள் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தினை தக்க வைத்திருக்கும் நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
நடிகை ஷிவானி நாராயணன்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான், சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இவர் அந்த சீரியலில் நடிக்கும் போது மிகவும் சிறு பெண். ஆனாலும், தனது நடிப்பு திறனின் காரணமாக தனக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தினை உருவாக்கி கொண்டார்.
‘ராஜேஷ் சொல்றதை நம்பாத, நம்ம குடும்பம் தான் எனக்கு முக்கியம்’ – எழிலிடம் கெஞ்சும் கோபி!!
அதே போல் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த ஆசாத்திற்கும் இவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. இதனால் இருவரும் “கடைக்குட்டி சிங்கம்” என்ற சீரியலிலும் நடித்தனர். ஆனால், ஷிவானி தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த சீரியலில் இருந்து விலகினார். பின், இந்த பொது முடக்கத்தின் போது தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட் காரணமாக மிகவும் பிரபலம் அடைந்தார்.
பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். தற்போது ஷிவானி மாலத்தீவுகளில் தனது அம்மாவுடன் விடுமுறை தினத்தினை கொண்டாடி வருகிறார். பல நாட்களுக்கு பிறகு அங்கு தான் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பல வண்ணங்களின் கலவையுடன் இருக்கும் உடையில் ஷிவானி வேற லெவல் அழகில் இருக்கிறார். இதனை அடுத்து அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.