பிக் பாஸ் சீசன் 4 இல் பல பரபரப்பான விஷயங்கள் நடந்து வருகின்றன. மேலும் இதில் கலந்து கொள்பவர்களின் பெயர் நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த 2 கவர்ச்சி பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது.
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 4 ஜூன் மாதத்தில் நடக்க இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. பிக் பாஸ் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அதற்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. அதில் கொரோனா முன்னெச்சரிக்கை பற்றி கூறப்பட்டிருந்தது.
ஆனால் எப்பொழுது தொடங்கும் என்ற தேதி வெளியிடவில்லை. மேலும் இந்த பிக் பாஸ் சீசனில் கலந்து கொள்ளும் பிரபலங்களின் பெயர் வலைதளங்களில் கசிந்தது. பலர் அதற்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். பிக் பாஸில் கலந்துகொள்ள இருந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
போட்டியாளர்கள் பெயரில் ஷிவானி நாராயணன் மற்றும் ரம்யா பாண்டியன் பெயர் வெளிவந்தது. ஆனால் அதற்கு அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. மேலும் இவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனராம். ஷிவானி இரட்டை ரோஜா சீரியலில் இருந்து இதற்காக தான் விலகியதாக கூறப்படுகிறது.
புகழ் கலந்து கொள்வதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. தொடர்ந்து பிக் பாஸ் சீசனில் இடையூறுகள் நடந்த வண்ணம் உள்ளன. இதை தாண்டி பிக் பாஸ் தொடங்கும் தேதியும் அறிவிக்காததால் மக்கள் கடுப்பாகியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க கொரோனா வைரஸ் பிரச்சனையால் பிக் பாஸ் சீசன் 4 இல் 16 போட்டியாளர்களுக்கு பதிலாக 12 போட்டியாளர்களே கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த சீசனில் 100 நாட்கள் இல்லையாம். 80 நாட்கள் தானம். பிக் பாஸ் விரைவில் தொடங்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.