அறிமுக போட்டியிலேயே அசத்திய இளம் வீரர்…, நம்பிக்கை வீண் போகவில்லை…, ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

0
அறிமுக போட்டியிலேயே அசத்திய இளம் வீரர்..., நம்பிக்கை வீண் போகவில்லை..., ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!
அறிமுக போட்டியிலேயே அசத்திய இளம் வீரர்..., நம்பிக்கை வீண் போகவில்லை..., ஹர்திக் பாண்டியா ஓபன் டாக்!!

இந்திய அணி, இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியை நேற்று விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்களை எடுத்திருந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, தீபக் ஹூடா (41*), அக்சார் படேல் (31*), இஷான் கிஷன் (37), ஹர்திக் பாண்டியா (29) ரன்களை எடுத்திருந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 160 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்தியாவின் அறிமுக பந்து வீச்சாளரான சிவா மாவி 4 ஓவர்களை வீசி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அறிமுக போட்டியிலேயே முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ள சிவா மாவி குறித்து, ஹர்திக் பாண்டியா சில கருத்துக்களை கூறியுள்ளார்.

2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா…, பவுலர்களை புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்டியா!!

“ஐபிஎல்லில் அவர் நன்றாக பந்து வீசுவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் அப்போதிலிருந்தே சிறப்பாக செயல்படுவார் என கூறியுள்ளார். மேலும், அவருடைய பலத்தை அறிந்த நான், பந்துவீச அனுமதித்தேன். எதுவானாலும் பரவாயில்லை நான் ஆதரவாக இருக்கிறேன் என்று அவரிடம் கூறியிருந்தேன். இவர், சிறப்பாக பந்து வீசி அசத்திவிட்டார்” என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியாவும் சிவா மாவி இணைந்து விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here