ஆபாச பட வழக்கில் சிக்கிய கணவருக்காக பரிந்து பேசும் ஷில்பா ஷெட்டி.. வாக்குமூலத்தால் ஏற்பட்ட பரப்பரப்பு!!

0

வெப் சீரிஸ் என கூறி பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை OTT தளங்களுக்கு விற்ற வழக்கில் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.

தற்போது இந்த ஆபாச பட வழக்கில் அவரின் மனைவி ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று ஷில்பா ஷெட்டியின் வீட்டிற்கு சென்று போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி அவரின் வாக்குமூலத்தை பெற்றனர்.

தன் கணவர் மேல் போடப்பட்ட ஆபாச பட வழக்கு குறித்து ஷில்பா ஷெட்டி கூறியதாவது, ”என் கணவர் ஒரு அப்பாவி, அவருக்கும் ஆபாச பட விவகாரத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்று ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார். தற்போது ஷில்பா ஷெட்டி அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை தொடர்ந்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த லேப்டாப் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here