கொரோனா பணியில் ஈடுபட்ட பிரபல நடிகைக்கு பக்கவாதம் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

0

இந்த வருடம் முழுவதும் கொரோனா தொற்று மக்கள் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது என்றே சொல்லலாம். இந்நிலையில் கொரோனா காலகட்டத்தில் தன்னார்வலராக பணியாற்றிய ஹிந்தி நடிகை ஷிகா மல்ஹோத்ராவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஷிகா மல்ஹோத்ரா

சீனாவில் இருந்து தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மக்களை உலுக்கி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த கொரோனா காலகட்டத்தில் மருத்துவ பணியாளர்களும், போலீசாரும் தங்களது உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு வழங்கி வந்தனர்.

மேலும் பல தன்னார்வலர்கள் முன் வந்து கொரோனா காலகட்டத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி புரிந்தும் வந்தனர். அந்த வகையில் ஒருவர் தான் ஷிகா மல்ஹோத்ரா. இவர் ஹிந்தி நடிகை ஆவார். காஞ்ச்லி லைஃப் இன் எ ஸ்லாஹ் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் கொரோனா காலகட்டத்தில் தன்னார்வலராக முன் வந்து உதவியவர். இவர் நர்சிங்கில் பட்டப்படிப்பு முடித்தவர். இவரின் அம்மாவும் ஒரு நர்ஸ் தானாம். இந்நிலையில் அவர் கொரோனா வார்டில் நர்ஸாக பணி புரிந்தார். அதனால் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது.

மேலும் அவருக்கு ஆக்சிஜன் அளவு கம்மியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அதிலிருந்து மீண்டும் வந்து வீட்டில் இருந்த அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பக்கவாதத்தால் அவரது வலது கை மற்றும் ஒரு பக்கமே செயலிழந்து போயுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here