தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சர்வானந்த். இவர் தமிழில் நடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதுமட்டுமின்றி கடந்த பல மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமண தேதி குறித்து எந்த தகவலும் வெளியே வராமல் இருந்த நிலையில், அறிவிக்கப்படாததால் திருமணம் நின்றுவிட்டது என்று செய்தி பரவியது. அதை மறுத்த நடிகரின் குடும்பத்தினர் சில வாரங்களுக்கு முன்பு தேதியை அறிவித்தனர்.
ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டு விபத்து., வெளியான அதிர்ச்சி தகவல்!!!
இதற்கிடையில் இவர் ஒரு விபத்தில் சிக்கி தப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று சர்வானந்த் மற்றும் ரக்ஷிதா ரெட்டி ஆகியோரின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. திருமண புகைப்படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.