நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஷாருக் குறித்த மறைமுக கருத்து ஒன்றை நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
பிரபலத்தை வம்பிழுக்கும் நடிகை:
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு இந்தி திரை பிரபலம் சார்ந்த பலரும் தங்களது வருத்தத்தை அண்மையில் தெரிவித்தனர். இந்த நிலையில், இவர் கைது சம்பந்தப்பட்ட கருத்து ஒன்றை தலைவி படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
அதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஜாக்கிசானின் மகன் கைது செய்யப்பட்டபோது, ஜாக்கிசான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். இருந்தாலும், ஜாக்கிசானின் மகன் 6 மாதம் சிறையிலிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இதன் மூலம் நீங்கள் ஷாரூக்கை மன்னிப்பு கேட்க சொல்கிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்