பங்குச் சந்தைகள் என்பவை ஏற்ற தாழ்வுகள் உடனையே இருப்பவை. அதில் காணப்படும் ஏற்ற தாழ்வு முதலீட்டாளர்களின் நிலையை மாற்றக்கூடியது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பை அமெரிக்கா அறிவித்த பிறகு பங்கு சந்தைகள் சரிவையே கண்டன. தற்போது ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இன்று உயர்வுடன் தான் தொடங்கியது. அந்த வகையில் சென்செக்ஸ் 263.22 புள்ளிகள் அதிகரித்து, 52,837.68 பள்ளிகளாகவும், இதே நிஃப்டி 59.80 புள்ளிகள் அதிகரித்து,15,806.30 புள்ளிகளாகவும் உள்ளது. மேலும் அனைத்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளும் ஏற்றத்துடனேயே நிலவுகிறது.
அதாவது,நிஃப்டி குறியீட்டை பொறுத்தவரை அதில் உள்ள அதானி போர்ட்ஸ், மாருதி சுசுகி, யு பி எல், ஒ.என்.ஜி.சி, டாடா மோட்டார்ஸ் போன்ற பங்குகள் அதிகம் லாபம் பெரும் பங்குகளாகவும், அதே நேரம் விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி லைஃப், நெஸ்டில், பிரிட்டானியா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ் போன்ற ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதே போல் சென்செக்ஸ் குறியீட்டை பார்க்கையில் மாருதி சுசூகி, லார்சன், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, டிசிஎஸ், ஆக்சிஸ் வங்கி போன்ற பங்குகள் அதிகம் லாபம் பெரும் பங்கு களாகவும்,நெஸ்டில், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்துள்ளது.
இந்த பங்கு சந்தைகள் நிலைத்தன்மை அற்றவை. எப்பொழுது வேண்டுமானாலும் ஏறும் இறங்கும்.இந்த நிலையில் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று நல்ல உச்சத்தை உச்சத்தை எட்டியுள்ளது. இந்த மூலம் பல முதலீட்டாளர்கள் அதிக அளவிலான லாபத்தை பெறுகின்றனர்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்