இயக்குனர் சங்கரின் மருமகனான ரோஹித் மேல் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைதாகும் ரோஹித்:
தமிழ் திரை உலகத்தில் மிகப்பெரிய இயக்குநராக உள்ளவர் சங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என்ற அடைமொழியால் அழைக்கப்படும் இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், தனது மூத்த மகளுக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித் உடன் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள இவர் மீது முக்கிய சட்ட நடவடிக்கை ஒன்று பாய்ந்துள்ளது.
அதாவது, புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சியாளரான தாமரைக்கண்ணன் அங்கு பயிற்சிக்கு வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த மாணவி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், தாமரைக்கண்ணன், கிளப்பின் உரிமையாளர் தாமோதரன், அவரது மகன் ரோஹித் அதாவது சங்கரின் மருமகன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது போக்சோ சட்ட நடவடிக்கை பாய்ந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்