பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாசன் இறந்து விட்டதாக கூறி வந்த நிலையில் இவர் குறித்து அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
நடிகர் கோட்டா சீனிவாசன் :
தமிழ் சினிமாவில் சாமி, திருப்பாச்சி, கோ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கோட்டா சீனிவாசன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி,கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் கடைசியாக காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து 75 வயதுடைய கோட்டா சீனிவாசன் இறந்து விட்டதாக சொல்லி சமூக வலைத்தளங்களில் ஒரு வதந்தி தீயாய் பரவி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சோசியல் மீடியா என்னை கொன்று விட்டது. அதை யாரும் நம்ப வேண்டாம். இது வெறும் வதந்தி தான். நான் நன்றாக தான் இருக்கிறேன். இது மாதிரி வதந்திகளை பரப்புபவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். நாளை தெலுங்கு வருடப்பிறப்பை கொண்டாட தயாராகி கொண்டிருக்கின்றேன்.
View this post on Instagram
இந்த சமயத்தில் இப்படி ஒரு வதந்தி. அதை நம்பி ஏராளமானோர் எனக்கு கால் செய்து விசாரிப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி எனது வீட்டு முன் 10 போலீஸ் காவலுக்கு நிற்கிறார்கள் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சீனிவாசன். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.