ஷபானா மற்றும் ஆர்யன் இருவரும் பிரியப்போவதாக வதந்திகள் வந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஆர்யன் ஷபானா:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செம்பருத்தி சீரியல் மூலமாக பிரபலமானவர் தான் ஷபானா. இவர் சில தினங்களுக்கு முன்பாக தனது காதலரான ஆர்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு பாண்டிச்சேரியில் எளிமையாக தங்களது ஹனிமூனை கொண்டாடினர். அங்கு இருவர்களுக்குள்ளும் எதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில நாட்களிலேயே திரும்பி வந்துவிட்டதாக தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து திருமணம் ஆன சில நாட்களிலேயே பிரிவா என பரவலாக பேசபட்டு வந்தது. ஆனால் இருவரின் தரப்பில் இருந்தும் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் வலைப்பக்கத்தில் குங்குமம், தாலியுடன் அழகிய புடவை கட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவின் மூலமாக இருவருக்குள்ளும் எந்த வித பிரச்சனையும் இல்லை என்பதை ஷபானா உறுதிப்படுத்தி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்