தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி 2018ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 109 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர். இது 2017ம் ஆண்டை விட 22 சதவீதம் அதிகம் ஆகும்.
என்சிஆர்பி புள்ளிவிபரங்கள்
2018-ம் ஆண்டு குழந்தைகள் மீதான குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 764 ஆகும். 2017-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 32 ஆக இருந்தது.
குழந்தை கற்பழிப்பு சம்பவங்களில் தமிழ்நாடு (1,457) மூன்றாவது இடத்திலும், மராட்டிய மாநிலம் (2,832) முதலிடத்திலும், உத்திரப் பிரதேசம் (2,023) இரண்டாம் இடத்திலும் உள்ளது.
குழந்தை கடத்தல் சம்பவங்கள் – 44.2 சதவீதம்
‘போக்சோ’ சட்டத்தில் பதிவான சம்பவங்கள் – 34.7 சதவீதம்
காணாமல் போன குழந்தைகள் – 67,134 பேர்
குழந்தைகளை வைத்து ஆபாசப்படம் எடுத்தது தொடர்பானது – 781
குழந்தை திருமணங்கள் புகார் – 501
ஆசிட் வீச்சு சம்பவங்கள் – 228
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், மத்தியபிரதேசம், மராட்டியம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
10,349 விவசாயிகள் தற்கொலை – என்சிஆர்பி 2018 ம் ஆண்டிற்கான அறிக்கை