முதல் தடவையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை… இதுதான்  உங்க பாப்பாவோட பெயரா???

0

பிரபல டிவியில் சீரியல் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ தேவி அசோக்குமார். அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் முதன் முறையாக தனது பெண் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த புகைப்படத்தோடு சேர்ந்து அவரின் குழந்தையின் பெயரையும் பதிவிட்டு உள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தன் முகத்தை மக்களுக்கு காட்டியவர் நடிகை  ஸ்ரீ தேவி அசோக்குமார். அதன் பிறகு அவர் பல தமிழ் சீரியல்களில் பல குணச்சித்திர வேடங்களில்  நடித்து உள்ளார். அதாவது சன் டிவியில் வாணி ராணி, கஸ்தூரி, இளவரசி,கல்யாண பரிசு உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்து உள்ளார். அதே போல் விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம், ராஜா ராணி, காற்றுக்கு என்ன வேலி போன்ற பிரபல சீரியல்களிலும், இவைகளை தவிர்த்து ஜீ தமிழ், ஜெயா டிவி போன்ற தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ்  பெற்றவர்.

இந்நிலையில் இவர் கடந்த ஒரு சில வருடங்களுக்கு முன்பு அசோக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர் சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு மிகவும் எளிய முறையில் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

தற்போது அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து உள்ளது.இதனையடுத்து அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக தன்னுடைய  இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும் அவரின் இந்த பெண் குழந்தைக்கு  சித்தாரா சிந்தலா என்ற பெயரைச் சூட்டி உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். அவரின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here